நால்வகை தவங்கள்:
1.சம்மணம்
இருகால் மடக்கி உட்கார்ந்த நிலையில் உடலை வருத்தி செய்தல்
2.வௌவால் தவம்
ஒன்றனைப் பிடித்துக்கொண்டு வௌவால் போன்று தொங்குதல்
3.முள்தவம்
முட்படுக்கையின் மீது படுத்துக் கொள்தல்
4.ஐம்புறந்தீ
ஐந்து நெருப்புகளின் நடுவே ஆற்றும் தவம்
ஆசீவகத்துறவிகள் வாழ்வின் இறுதி நாட்களில் அகன்ற வாயுடைய தாழிகளில் புகுந்து தவம் மேற்கொண்டு உயிர் துறக்கும் வழக்கத்தை கொண்டிருந்தனர்.
இந்த உயர்நிலைத்தவத்தினை தொல்காப்பிய உரையில் நச்சினார்க்கினியர் "தாழி கவிப்பத் தவஞ்செய்வார் மண்ணாக
வாழிய நோற்றனை மால்வரை" என்கிறார்.
திரித்துவம் :-
இறைவன் மூவேறு நிலைகளில் இருப்பதாக பலசமயங்கள் கருதுகின்றன. உண்மையில் மூன்று முதன்மை ஆசீவக சித்தர்களே மும்மூர்த்திகளாக ஆக்கப்பட்டுள்ளனர்.
அதாவது
1.பேயாண்டி(சிவன்) - செம்மை-தந்தை
2.மாயாண்டி(திருமால்) - கருமை-மகன்
3.விருமாண்டி(பிரமன்) - வெண்மை-தூய ஆவி
ஆசீவகயானை :-
யானை பிறக்கும்போது பொதுவாக கருமையாகப் பிறக்கும். வளர வளர அது சாம்பல்நிறம் கொள்ளும். அதன்பிறகு சற்று கருநீல நிறம் கொள்ளும். ஒரு படிநிலையில் இருந்து மற்றொரு படிநிலைக்கு மாறுவது வண்ணமயமான ஆசீவக சமயத்திற்கு பொருந்துவதே காரணம்.
யானையின் கற்றுக்கொள்ளும் திறன், நினைவாற்றல்,பொறுமை, மனவலிமை,குழுவாக இயங்கும்பண்பு போன்றவற்றை ஒரு ஆசீவகர் பெற்றால்தான் பல படிநிலைகளைக் கடந்து நிறமிலி(கழிவெண்நிலை)யை அடையமுடியும்.அதனைக் குறிக்கவே சாத்தன் கோயில்களில் வெள்ளையானை சிற்பங்கள் உள்ளன.
நல்வெள்ளை நிலை என்பது தெய்வத்தன்மை அடைதலாகக் கருதப்பட்டது.ஆகவே யானையின் தலையையும் மாந்தரின் (ஆசீவக தீர்த்தங்கரர்) உடலையும் இணைத்து ஆசீவக நெறியின் குறியீட்டுக்கடவுளான விநாயகரை உருவாக்கினர்.
(சுக்லாம் பரதரம் = வெள்ளாடை அணிந்தவரே எனும் ஆரிய மந்திரம்!!)
அனைத்து கோயில்களிலும் முதலில் விநாயகரை வணங்கியபின்பே உள்ளே செல்லும் வழக்கம் இன்று உள்ளது.இது ஆசீவகத்தின் செல்வாக்கு மறையவில்லை என்பதனை உணர்த்துகிறது. பழந்தமிழரின் குரு(சாத்தன்) வணக்கமே தற்போது பிள்ளையார் வழிபாடாக மாறியுள்ளது!...
0 கருத்துகள்