• இறையாண்மை அரசுக்கும் மாநில அரசுக்கும் வித்தியாசம் தெரியாத கிணற்று தவளை திராவிட அறிவுஜீவிகள்

உலக ஒழுங்கு,அதன் இயங்கு விதி, புவிசார் நலன், போரியல், ராஜதந்திரம் என்பவற்றில் திராவிட அறிவுஜீவிகள் ஒரு கிணற்றுதவளைகள் என்பதை பலமுறை சுட்டி காட்டியிருக்கின்றேன்.


சமூக ஊடகங்களில் திராவிட அறிவுஜீவிகள் அல்லது உபிகள் பொதுவாக விடுதலை புலிகளின் ஆயுத போராட்டத்தை பற்றி எகத்தாளமாக பதிவிடுவது தெரிந்ததுதான்.


அந்த எகத்தாளங்களில் ஒன்று ‘தமிழீழத்தை அமைக்க போராடிய இலங்கை தமிழர்களின் மொத்த சனத்தொகையே வெறும் 20 லட்ச சொச்ச மக்கள்தான். அது தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்தின் சனத்தொகைதான். அதுபோல தமிழீழத்தின் பரப்பளவு வெறும் 20000 சொச்ச சதுர கிமீதான். அது தமிழ்நாட்டின் சில மாவட்டத்தின் அளவுதான் இருக்கும். இதற்கு ஒரு இறையாண்மை அரசு தேவையா ? இத்யாதி இத்யாதி’ என அது தொடரும்.


இந்த திராவிடத்தின் கூமுட்டைத்தனத்தை காட்டுவதற்காகவே இந்த பதிவு.


• தமிழ்நாட்டின் பரப்பளவு 130058 சதுர கி.மீ.

தமிழ்நாட்டு சனத்தொகை குறைந்தது 8 கோடி.


• தமிழ்நாட்டை விட குறைவான பரப்பளவு கொண்ட நாடுகள் குறைந்தது 90 நாடுகளாவது இருக்கின்றன.


• தமிழ்நாட்டைவிட குறைவான சனத்தொகை கொண்ட நாடுகள் குறைந்தது 160 நாடுகளாவது இருக்கின்றன.


ஆனால் இந்த குறைவான பரப்பளவைவோ, சனத்தொகையையோ கொண்ட இந்த நாடுகள் தமிழ்நாட்டை விட பல மடங்கு பலம் வாய்ந்தவை.


எப்படி? 


• ஏனென்றால் இந்த சிறிய நாடுகள் எல்லாம் உலக ஒழுங்கால் அங்கீகரிக்கப்பட்ட இறையாண்மையுள்ள நாடுகள்.  அவைகள் உலக ஒழுங்கில் உள்ள Great powers களோடு தொடர்ச்சியாக ராஜதந்திர/ புவிசார் அரசியல் விளையாட்டை விளையாடி கொண்டிருப்பவை.


• அப்போது பரப்பளவிலும்,சனத்தொகையிலும் பெரிதாக உள்ள தமிழ்நாடு? 

அது முகம் இல்லாதது. தனக்கென குரல் இல்லாதது. 


உலக ஒழுங்கின் ராஜதந்திர /புவிசார் அரசியல் / போரியல் விளையாட்டில் தமிழ்நாடு சேர்த்துகொள்ளப்பட மாட்டாது. 


தமிழ்நாடு தனது விருப்பம் என எதையாவது உலக ஒழுங்கிற்கு சொல்ல நினைத்தால் , அது அதனது முதலாளி இந்தியா ஒன்றிய அரசினூடாகவே தெரிவிக்க முடியும்.


இதுதான் இறையாண்மை உள்ள நிலப்பரப்பிற்கும், இறையாண்மை அற்ற நிலப்பரப்பிற்கும் இடையிலான வித்தியாசம். இதுதான் உலக ஒழுங்கின் இயங்குவிதி.


திராவிடத்தின் பாணியிலேயே சிறு உதாரணம் ஒன்று தருகிறேன்.


• சிங்கப்பூர் 


வெறும் 716 சதுர கி.மீ பரப்பளவையும் வெறும் 56 லட்சம் சனத்தொகையையும் கொண்ட சிங்கப்பூர் உலக ஒழுங்கின் பார்வையில் தமிழ்நாட்டைவிட ஆயிரம் மடங்கு முக்கியமானது. 


எப்படி?


இன்று ஆசிய பிராந்தியத்தில் சீனாவை முடக்க அமெரிக்கா பிரயோகிக்கும் containment policy எனும் strategy இல் சிங்கப்பூர் முக்கிய பங்கு வகிக்கிறது.


• சிங்கப்பூரின் புவிசார் நலன் நகர்வுகள்


1990 ஆம் ஆண்டு சிங்கப்பூரும் அமெரிக்காவும் 1990 Memorandum of Understanding எனும் உடன்படிக்கையை செய்துகொண்டன.இந்த உடன்படிக்கையின் ஆயுட்காலம் 15 வருடம்.


பிறகு இந்த உடன்படிக்கை 2005 இல் அடுத்த 15 ஆண்டுக்கு புதுப்பிக்கப்பட்டது.


பிறகு மீண்டும் 2019 இல் அடுத்த 15 வருடங்களுக்கு மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.


இந்த உடன்படிக்கையின்படி அமெரிக்கா அதனது இராணுவ தேவைகளுக்காக சிங்கப்பூரின் விமான, கடற்படை தளங்களை பயன்படுத்தமுடியும். 


(facilitating US access to Singapore's air and naval bases, as well as providing logistic support for their transiting personnel, aircraft and vessels)


மலாக்கா நீரிணையில் (Strait of Malacca) சிங்கப்பூர் தனது செல்வாக்கை தொடர்ந்து தக்கவைக்க வேண்டுமானால், சீனாவை கட்டுப்படுத்தவேண்டிய தேவை அதற்கு இருக்கிறது.


அதற்கான புவிசார் நலன் சார்ந்த நகர்வுகளில் ஒன்றுதான் சிங்கப்பூரின் அமெரிக்காவுடனான பாதுகாப்பு உடன்படிக்கை. 


சீனாவை கட்டுப்படுத்துவதற்காக சிங்கப்பூரும் அமெரிக்காவும் ஒன்றாக இணைந்து செயற்படுகின்றனர்.


• சிங்கப்பூரின் இராணுவ வலிமை


சிங்கப்பூரின் இராணுவ வலிமை பற்றி பலர் அறிந்திருக்கமாட்டார்கள்.


சிங்கப்பூரின் விமானப்படை (Republic of Singapore Air Force -RSAF) பெரும்பாலும் அமெரிக்க F-15 களையும் F-16 களையும் கொண்டிருக்கிற பலமான விமானப்படை. தொழில்நுட்பரீதியில் பழசாகிவரும் F-16 களுக்கு பதிலாக இன்றைய உலகின் அதி நவீன Stealth multirole combat Fighters களான F-35 களை வாங்க போகிறது. இந்த F-35 Fighters களை வைத்திருக்கும் நாடுகளை விரல் விட்டு எண்ணிவிடலாம்.


அதேபோல் சிங்கப்பூரின் கடற்படை (Republic of Singapore Navy - RSN) ஆசியாவின் மிகச் சிறந்த முதல் 5 கடற்படைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.


அதனது கடற்படை பலம் பின்வருமாறு


5 Submarines (with two more on order)

6 Frigates

6 Corvettes

4 Amphibious landing ships

4 Mine warfare vessels


• மேலே கூறியதுபோல சிங்கப்பூரின் மொத்த பரப்பளவு வெறும் 716 சதுர கி.மீ் தான். தமிழ்நாட்டின் சென்னையை தவிர மீதியுள்ள எந்தவொரு மாவட்டத்தின் அளவை விடவும் பல மடங்கு சிறியதுதான்.


• அதனது சனத்தொகை வெறும் 56 லட்சம்தான்.சென்னையின் சனத்தொகையை விட குறைவு.


ஆனால் சிங்கப்பூர் உலகின் பெரும் Great powers களுடன் புவிசார் அரசியல்/போரியல் சதுரங்க ஆட்டம் ஆடிக்கொண்டிருக்கிறது.


மறுவலமாக 130058 சதுர கி.மீ. பரப்பளவையும்

8 கோடி சனத்தொகையையும் கொண்ட தமிழ்நாட்டை எடுத்துகொள்ளுங்கள்.


தனக்கு சேர வேண்டிய வரிப்பணத்தில் அதிக சதவீதத்தை தருமாறு பணிவுடன் இந்திய ஒன்றிய அரசிடம் கேட்கவேண்டியிருக்கிறது.


தான் விரும்பாத நீட் கல்வி திட்டத்தை மாற்றுங்கள் என கெஞ்ச வேண்டியிருக்கிறது.


இயற்கை பேரிடர் வந்தால் நிவாரண நிதியை கூட்டுங்கள் என இந்திய ஒன்றிய அரசிடம் நடையாய் நடக்கவேண்டியிருக்கிறது.


அகழ்வாராய்ச்சியில் பத்து அடி அதிகமாக தோண்டுவதற்கே அனுமதி வாங்க வேண்டிய நிலமை.


பக்கத்து நாட்டு கடற்படை பல நூற்றுக்கணக்கான தமிழ்நாட்டு மீனவர்களை சுட்டு கொன்றபோதும் வாய் பொத்தி கடந்து போக வேண்டிய நிலமை.


இன்னும் இத்யாதி,இத்யாதி.


இதுதான் உலக ஒழுங்கில் இறையாண்மையுள்ள அரசாக இருப்பதற்கும் ஒரு நாட்டில் வெறும் தேசிய இனமாக வாழ்வதற்குமான வித்தியாசம்.


இன்னும் தம்மாத்துண்டு இறையாண்மை தேசங்கள் நிறைய இருக்கின்றன. ஆனால் அவைகள் எல்லாமே தமிழ்நாட்டை விட பலம் கூடியது.


• ஆசிய பிராந்தியத்தில்  அமெரிக்கா- சீனாவிற்கு இடையில் நடக்கும் Great Game இன் ஒரு பகுதியாக பப்பூவா நியூ கினியா அதனது Lombrum Naval Base எனும் கடற்படை தளத்தை அமெரிக்காவிற்கு கொடுத்திருக்கிறது. அதனது சனத்தொகை  80 லட்சம் சொச்சம்தான். அதற்கு உலக ஒழுங்கிடம் கிடைக்கும் மரியாதை கூட தமிழ்நாட்டிற்கு கிடைக்காது.


இவ்வளவு ஏன்? இலங்கை கூட தமிழ்நாட்டின் பரப்பளவில் அரைவாசிதான். அதனது சனத்தொகை தமிழ்நாட்டின் சனத்தொகையில் மூன்றில் ஒரு பங்குதான். இன்றுவரை இலங்கை தண்ணிக்காட்டி கொண்டிருக்கிறது.


• இது உணர்த்தும் பாடம் என்ன?


இறையாண்மை அரசாக மாறுவதுதான் முக்கியமே ஒழிய அதனது பரப்பளவோ, சனத்தொகையோ இங்கு பொருளற்றது. 


இது தெரியாமல்தான் கிணற்று தவளை உபிகள் சல்லியடித்து கொண்டிருக்கிறார்கள்.


சரி. இனி அடுத்த விடயத்திற்கு வருகிறேன்.


வெறுமனே உலக ஒழுங்குடன் புவிசார் அரசியல்/போரியல் சதுரங்க ஆட்டம் ஆடுவதுதான் முக்கியமா என்ற கேள்வி உங்களுக்கு எழுவது இயல்பு.


மேலே நான் சொன்னவை இறையாண்மை அரசின் கனதியை உங்களுக்கு எடுத்துரைப்பதற்காக கூறப்பட்டது.


• ஆனால் ஏன் ஒரு தேசிய இனத்திற்கு இறையாண்மையுள்ள அரசு தேவை?


இதற்கு ஒரு உதாரணம் தருகிறேன்.


சிங்கள இனமும் சிங்கள மொழியும் அதிக காலம் உயிர்வாழுமா அல்லது தமிழினமும், தமிழும் அதிக காலம் உயிர்வாழுமா என கேள்வி எழுப்பினால் எனது பதில் பின்வருமாறு இருக்கும்.


இந்த உலக ஒழுங்கு எனும் அமைப்பு இருக்கும்வரை சிங்கள இனமும்,சிங்கள மொழியும் அழியாது என்பதை என்னால் உறுதியாக சொல்லமுடியும். 


காரணம் உலக ஒழுங்கிற்குள் இறையாண்மையுள்ள அரசை நிறுவியிருப்பவைகளை எளிதில் அழிக்கமுடியாது.


அவ்வாறு இறையாண்மையுள்ள அரசை கொண்ட சிங்கள இனம் தனது இருப்பினூடாக சிங்கள இனத்தையும்,சிங்கள மொழியையும் உயிர்ப்புடன் வைத்திருப்பதற்கான செயற்திட்டங்களை செய்துகொண்டே இருக்கும்.


ஆனால் தமிழினமும்,தமிழ் மொழியும் உயிர்ப்புடன் இருக்குமா என்பதற்கு எந்தவித உறுதியையும் தரமுடியாது. அது இந்திய ஒன்றியத்தின் செயற்திட்டத்திலேயே தங்கியிருக்கிறது.


இனிவரும் காலங்களில் இந்திய ஒன்றிய அரசு assimilation ஐ தீவிரமாக கடைபிடித்தால் , இந்திய ஒற்றை அடையாளத்தில் தமிழ் இனத்தின் அடையாள கூறுகள் கரைந்து போகலாம். தமிழ் மொழியும் கரைந்து போகலாம். 


அதனால் இந்திய ஒன்றிய அரசின் கைகளிலேயே தமிழ் இனத்தின், தமிழ் மொழியின் விதி இருக்கிறது. நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.இதே விதிகள்தான் இலங்கை, சிங்கப்பூர், மலேஷியா போன்ற நாடுகளில் வாழும் தமிழர்களுக்கும்.


• இவையெல்லாம் நமக்கு கற்று தரும் பாடம் என்ன ? 

ஒரு தேசிய இனம் தனக்கான மொழி, அடையாளம், பண்பாட்டை தனது வரலாற்று தாயக நிலத்தில் தக்கவைக்க வேண்டுமானால், அது உலக ஒழுங்கின் இறையாண்மை நாடுகளின் பட்டியலுக்குள் எப்பாடுபட்டாவது நுழைந்து விடவேண்டும். இந்த சமன்பாட்டில் பரப்பளவு, சனத்தொகை எல்லாம் இரண்டாம் பட்சம் அல்லது பொருள் அற்றது.


தமிழருக்கு என  இறையாண்மையுள்ள அரசை உலக ஒழுங்கின் பட்டியலுக்குள் சேர்க்க நடத்திய வீரஞ்செறிந்த போர்தான் விடுதலைபுலிகளின் ஆயுதப்போராட்டம்.


க.ஜெயகாந்த்

முகநூல்