போரியல் பார்வையில் வரலாற்று நிகழ்வுகள் -பகுதி 2



1948 இல் இலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து இன்றுவரை இலங்கை அரசு, தமிழர்களின் வரலாற்று தாயக நிலமான கிழக்கு மாகாணத்தில் அரச ஆதரவு சிங்கள குடியேற்றங்களை நடத்திவருகிறது.


இந்த அரச ஆதரவு குடியேற்றங்களிற்கு இரு பரிமாணங்கள் உண்டு. 


1. அரசியல் பரிமாணம்

2. போரியல்ரீதியான பரிமாணம்


இந்த இருவேறு பரிமாணங்களையும் சுருக்கமாக விளக்க முனைவதே இந்த பதிவின் நோக்கம்.


இந்த வரலாற்று நிகழ்வுகளின் பாடங்கள் தமிழ்நாட்டிற்கு கூட எதிர்காலத்தில் உபயோகப்படலாம்.


இனி இலங்கை விடயத்திற்கு வருகிறேன்.


1. அரசியல் பரிமாணம்


கிழக்கு மாகாணத்தின் கடந்த 130 வருட சனத்தொகை கணக்கெடுப்பு அட்டவணையை கீழே இணைத்துள்ளேன். இந்த அட்டவணையே சகலவற்றையும் விளக்கிவிடும்.


இலங்கை தமிழர்களின் தமிழீழம் என்ற கருத்தியலிற்கான அடிப்படை வரலாற்று தாயக நிலமே வடக்கு மாகாணமும் கிழக்கு மாகாணமும்தான்.


•சுதந்திரத்திற்கு பின்னர் இலங்கை அரசு இந்த தமிழீழ கோட்பாட்டை பலவீனப்படுத்த கிழக்கு மாகாணத்தின் குடிப்பரம்பலை மாற்ற ஆரம்பித்தது. 


அதன் முதற்படிதான் அரச ஆதரவு சிங்கள குடியேற்றங்கள். அதாவது இலங்கை அரசு கிழக்கு மாகாணத்தில் சிங்கள மக்களை குடியேற்றியது. 


1946 இல் 8.4%  ஆக இருந்த சிங்கள மக்களின் சனத்தொகை 1981 சனத்தொகை கணக்கெடுப்பில் 24.99% மாறியிருப்பதை கீழுள்ள அட்டவணையில் காணலாம். 


இது விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறையை கொண்ட இலங்கையில் , கிழக்கில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை படிப்படியாக குறைக்க வழி செய்தது.


• அத்துடன் இந்த பெரும்பாலான சிங்கள குடியேற்றங்கள் வடக்கு மாகாணத்திற்கும் கிழக்கு மாகாணத்திற்கும் இடையிலான எல்லை பகுதிகளிலேயே உருவாக்கப்பட்டன.


• இவ்வாறு செய்ததன் காரணம் என்ன?

தமிழர்களது வரலாற்று தாயகமான வடக்கு கிழக்கின் ‘நில தொடர்ச்சி’ எனும் அம்சத்தை அழிக்கவேண்டும் என்பதற்காகவே. 


•#இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு பிறகு


1987 ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அதில் இந்த குடியேற்றம் தீர்க்கமான  பாத்திரத்தை வகித்தது.


அது எப்படி என்பதை மிக சுருக்கமாக விளக்குகிறேன்.


ஈழ போராட்டத்தை பலவீனப்படுத்த தமிழ், முஸ்லீம் மக்களுக்கிடையில் divide and rule முறையை இலங்கை அரசு வெற்றிகரமாக கையாண்டது. 


அதன் தொடர்ச்சியாக இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் மிக முக்கியமான சரத்து ஒன்று சேர்க்கப்பட்டது.


#அது என்ன அந்த சரத்து?


அந்த இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் முக்கியமான சரத்தின் பகுதி கீழே.


2.RESOLVE THAT:


2.1 Since the Government of Sri Lanka proposes to permit adjoining provinces to join to form one administrative unit and also by a referendum to separate as may be permitted to the northern and eastern provinces as outlined below:


2.2 During the period, which shall be considered an interim period (i.e. from the date of the elections to the provincial council, as specified in para 2.8 to the date of the referendum as specified in para 2.3), the northern and eastern provinces as now constituted, will form one administrative unit, having one elected provincial council. Such a unit will have one governor, one chief minister and one board of ministers.


2.3 There will be a referendum on or before 31st December 1988 to enable the people of the eastern province to decide whether:


a) The eastern province should remain linked with the northern province as one administrative unit, and continue to be governed together with the northern province as specified in para 2.2 


or:


b) The eastern province should constitute a separate administrative unit having its own distinct provincial council with a separate governor, chief minister and board of ministers. The president may, at his discretion, decide to postpone such a referendum.


2.6 A simple majority will be sufficient to determine the result of the referendum.


சரத்து 2.1 இன் படி வடக்கு மாகாணமும் கிழக்கு மாகாணமும் ஒரே நிர்வாக அலகாக இயங்க அனுமதிக்கிறது. ஆனால் அது தற்காலிக ஏற்பாடு மட்டுமே.


காரணம் சரத்து 2.3 இன் படி, கிழக்கு மாகாணம் தொடர்ந்து வடக்குடன் இணைந்து இருக்கவேண்டுமா என்பதை முடிவு செய்வதற்கு, 31 டிசம்பர் 1987 இற்கு முன்னர் கிழக்கு மாகாண மக்களிடம் ஒரு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என கூறுகிறது.


அந்த சர்வஜன வாக்கெடுப்பின் முடிவின்படிதான் கிழக்கு மாகாணம் வடக்குடன் தொடர்ந்து இணைந்திருப்பதா அல்லது விலகிவிடுவதா என்பது முடிவு செய்யப்படும். இதில்தான் அந்த சூட்சுமம் இருக்கிறது.


1981 கணக்கெடுப்பின்படி கிழக்கு மாகாண முஸ்லிம்களின் சதவீதம் 32% .

சிங்களவர்கள் 25% . 


ஆக சர்வஜன வாக்கெடுப்பு நடந்தால் முஸ்லிம் மக்களும் சிங்கள மக்களும் வடக்குடன் இணைவதை எதிர்த்தே வாக்களிப்பார்கள். இந்த இருவரினதும் சதவீதத்தை கூட்டினால் 57% வரும்.


சரத்து 2.6, சர்வஜன வாக்கெடுப்பின் முடிவிற்கு சாதாரண பெரும்பான்மை வெற்றியே போதும் என்கிறது.


2.6 A simple majority will be sufficient to determine the result of the referendum.


 இதனால் இந்த சரத்தை விடுதலை புலிகள் கடுமையாக எதிர்த்ததும், ராஜீவ் காந்தி அப்படியொரு வாக்கெடுப்பு நடக்காமல் தான் பார்த்து கொள்வதாக வாய்மூல வாக்கு கொடுத்ததும் தனிக்கதை . இதற்கான ஆதாரம் அன்டன் பாலசிங்கம் எழுதிய ‘விடுதலை’ புத்தகம். 


ஆக விடுதலைப்புலிகள் உருவாக்க போராடிய தமிழீழம் என்ற இறையாண்மையுள்ள அரசின் நிலப்பரப்பின் அரைவாசி பகுதியை திறமையாக பிரித்தெடுப்பதற்கு உதவியது இலங்கை அரசின் திட்டமிட்ட சிங்கள குடியேற்றமே.


இலங்கை அரசின் இந்த திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் இரு விடயங்களை சாதித்திருக்கிறது.


• தமிழீழம் என்ற கருத்தியலின் வரலாற்று தாயக நிலப்பரப்பை பலவீனமாக்கியது.


• தமிழீழ நிலப்பரப்பின் அளவை சுருக்கியது.


2) இனி இதன் போரியல்ரீதியான பரிமாணம்


அடுத்தது இந்த அரச ஆதரவு சிங்கள குடியேற்றத்தின் விளைவாக இலங்கை இராணுவத்திற்கு கிடைத்த போரியல்ரீதியான அனுகூலத்தை விளக்குகிறேன்.


வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் எல்லை பகுதியிலேதான் இலங்கை அரசு அதனது சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்தி இருந்தது என மேலே குறிப்பிட்டிருந்தேன்.


அதனால் போராளிகள் தரைவழியாக வடக்கிலிருந்து கிழக்கிற்கு செல்வதாக இருந்தால் இந்த சிங்கள குடியேற்றங்களை தாண்டியே செல்லவேண்டும். 


ஆனால் இந்த சிங்கள குடியேற்றங்கள் வெறுமனே மக்களால் ஆன குடியேற்றங்கள் மட்டுமல்ல. அந்த சிங்கள குடியேற்றங்களுடன் பல மினி முகாம்களும் பாரிய இராணுவ தளங்களும் அமைக்கப்பட்டு இருந்தன.


• உதாரணத்திற்கு விடுதலைப்புலிகள் முல்லைத்தீவு தளப்பிரதேசத்திலிருந்து திருகோணமலைக்கு பெரும்படைகளையும்,இராணுவ வளங்களையும் நகர்த்தவேண்டும் என வைத்துக்கொள்வோம்.


இதற்கு இரண்டு தரைவழி பாதைகள் உண்டு. 


முதலாவது முல்லைத்தீவின் தென்கிழக்கு பகுதியினூடாக செல்கிறது. 


இந்த பாதையினூடாக செல்வதென்றால் மணலாறு (வெலிஓயா), கொக்குத்தொடுவாய், கொக்கிளாய், புல்மோட்டை பிரதேசங்களை தாண்டி செல்லவேண்டும். ஆனால் இங்குதான் இலங்கை அரசு பலமான சிங்கள குடியற்றங்களை நிறுவி வைத்திருக்கிறது.


அந்த மணலாற்று பகுதியிலேதான் பலமான இராணுவ தளம் இருந்தது. அதன் பெயர் ‘ஜானகபுர’ இராணுவதளம். தமிழில் இது மண்கிண்டிமலை என அழைக்கப்பட்டது. இந்த இராணுவத்தளத்திற்கு முன்னடுக்கு பாதுகாப்பு அரணாக பல மினி முகாம்களும் உண்டு. இது இராணுவவேலி என்றே அழைக்கப்பட்டது.


ஆக இந்த பாதையினூடாக விடுதலைப்புலிகள் தங்களது படைகளையும் வளங்களையும் நகர்த்துவது சாத்தியமில்லாதது.


மற்றைய தரைப்பாதை முல்லைத்தீவின் தென்மேற்கு பகுதியினூடாக செல்கிறது. 


இது நெடுங்கேணியூடாக நொச்சிக்குளம், பட்டிக்குடியிருப்பு போன்ற தமிழர் கிராமங்களின் ஊடாக முதலில் செல்கிறது. ஆனால் அதற்கடுத்து பராக்கிரமபுர,பதவியா போன்ற சிங்கள குடியேற்ற பகுதிகளை தாண்டிச்செல்ல வேண்டும்.


ஆனால் ஒப்பீட்டளவில் விடுதலைப்புலிகளுக்கு, இந்த தரைப்பாதை மேலே குறிப்பிட்ட மணலாறு பகுதி தரைப்பாதையை விட இராணுவரீதியில் சிரமங்கள் குறைந்தது. அவ்வளவுதான்.


இந்த சிங்கள குடியேற்றங்கள் இராணுவத்திற்கு Front Defense Line( FDL) போலவே செயல்பட்டது. ஏனெனில் விடுதலைப்புலிகளின் நடமாட்டங்களையோ , படை நகர்த்தலையோ இலகுவாக சிங்கள மக்கள் இலங்கை இராணுவத்திற்கு தெரியபடுத்த முடியும்.


இதனால் அநேகமான சந்தர்ப்பங்களில் விடுதலைப்புலிகள் தமது படைநகர்த்தல், படை வளங்கள் நகர்த்தலை கடல் பாதையினூடாகவே நடத்தினார்கள்.


• #இலங்கை இராணுவத்தின் இந்த போரியல் சாதகத்தை முறியடிக்க வேண்டிய நிர்ப்பந்தம்


• முல்லைத்தீவு தளப்பிரதேசத்திலிருந்து கிழக்கிற்கு படைகளை,படை வளங்களை நகர்த்துவதற்கு தடையாக இருக்கும் இந்த எல்லையோர இராணுவ வேலியை அப்புறப்படுத்த வேண்டிய போரியல் தேவை விடுதலைப்புலிகளுக்கு இருந்தது.


அதன் ஒரு பகுதியாக 1993 இல், ஜானகபுர இராணுவ தளம் மீதும் அதனை சுற்றியிருந்த மினி முகாம்கள் மீதும் ஒரு பெரும் தாக்குதலை நடத்தி அதனை முற்றாக தகர்த்தார்கள். புலிகள் இந்த தாக்குதலுக்கு ‘இதயபூமி 1’ என்று பெயரிட்டிருந்தார்கள்.


மீண்டும் இலங்கை இராணுவம் ஜானகபுர இராணுவ தளத்தை முன்பைவிட பலமானதாக மாற்றியது.


மீண்டும் 1995 இல், விடுதலைப்புலிகள் ஜானகபுர இராணுவ தளம் மீது பெரும் தாக்குதலை தொடுத்தார்கள். ஆனால் அந்த தாக்குதல் பெரும் தோல்வியில் முடிந்தது.


•அதே போல போரியல்ரீதியாக இலங்கை இராணுவத்திற்கு இந்த பெரும் அனுகூலத்தை வழங்கும் சிங்கள குடியேற்றங்கள் மீதும் விடுதலைப்புலிகள் சில தாக்குதல்களை நடத்தியிருந்தார்கள்.


இந்த தாக்குதல்களில் சிங்கள பொதுமக்கள் கணிசமானோர் கொல்லப்பட்டனர்.


இன்றும் இணையத்தில் ‘விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்ட பொதுமக்கள்’ என்ற தலைப்பில் உலாவும்  பெரும்பாலான புகைப்படங்கள், இந்த எல்லையோர குடியேற்றங்களில் கொல்லப்பட்ட சிங்கள பொதுமக்களின் படங்களே.


ஆனால் எனது முன்னைய பதிவுகளில் குறிப்பிட்டது போல, விடுதலைப்புலிகள் தங்களது 26 வருட போரில் தங்களது போராட்டத்தை இலக்கை நோக்கி நகர்த்த சில தருணங்களில் சில கடினமான முடிவுகளை எடுக்கவேண்டியிருந்தது. அதில் ஒன்றுதான் மேலே கூறியவையும்.


இதில் நீங்கள் உற்று கவனிக்கவேண்டியது இலங்கை அரசு எவ்வளவு நுணுக்கமாக போரியல்ரீதியாக தமக்கு சாதகத்தை தரும் விதமாக இந்த சிங்கள குடியேற்றங்களை அமைத்திருக்கிறது என்பதையே.


ஆக இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இலங்கை அரசு சிங்கள குடியேற்றங்களை வலிந்து திணித்தது என்பதை பலநேரங்களில் வாசித்துவிட்டு கடந்து சென்றுவிடுவோம்.


ஆனால் அந்த ஒற்றை ‘குடியேற்றம்’ என்ற வரலாற்று நிகழ்வில் இத்தகைய ஆழமான அரசியல் பரிமாணங்களும், போரியல் பரிமாணங்களும் இருக்கின்றன என்பதை உங்களுக்கு உணர்த்தவே இந்த பதிவு.


க.ஜெயகாந்த்

முகநூல்