சங்க தமிழ்நூல் தொகுப்பிற்கு "திராவிட களஞ்சியம்" என பெயர் சூட்டுவதை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்!!.



சங்கத்தமிழ் நூல்களை சந்தி பிரித்து எளிய தொகுப்பாக வெளியிடப்போவதாகவும், அதற்கு "திராவிட களஞ்சியம்" என பெயர் சூட்டப்போவதாகவும் தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.


சங்க நூல்களை பொறுத்தவரை "திராவிடம்" என்ற சொல்லே அங்கு இல்லை. சங்க நூல்களில் "தமிழ் தமிழர் தமிழகம் தமிழ்நாடு" என்ற சொல்கள் தான் இயல்பாக காணப்படுகிறது. ஆனால் திமுக அரசு வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு "திராவிட" என்றசொல்லை தமிழரிடையே திணிக்கிறது.


திமுகவினர் தொடர்ந்து தமிழ் தமிழர் என்ற இயற்கை பெயரை தவிர்த்து திராவிடம் திராவிடர் என்ற செயற்கை வடச்சொல் பெயரை பயன்படுத்தி வருகின்றனர். உதாரணமாக திமுகவினர் தங்களை "I am belongs to dravidian stock" என கூறிக்கொள்கிறார்கள். மேலும் அண்மையில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் பிறந்த நாள் வாழ்த்து செய்தியில் "திராவிட சிறுத்தை" என சுடாலின் குறிப்பிட்டிருந்தார். விசிகவினர் திருமாவளவனை இயல்பான பெயரான "எழுச்சித்தமிழர்" என்றஅடைமொழியிலேயே அழைப்பார்கள்.


தேர்தல் வரை தமிழ் தமிழர் என கூறிவிட்டு தமிழரிடம் வாக்கு பெற்று ஆட்சியை பிடித்ததும் திராவிடர் கோசம் போடுவது திமுகவின் தந்திரமாக உள்ளது. தமிழ்நாட்டில் விசயநகர ஆட்சிக்குப்பின் எழுதப்பட்ட இலக்கியங்களில் மட்டுமே திராவிட என்ற சொல் கையாளப்பட்டுள்ளது. மேலும் திராவிட என்ற சொல்லை "தந்திரவார்திகா" என்ற ஆரிய நூலிலிருந்தே தான் எடுத்ததாக கார்டுவெல் குறிப்பிடுகிறார். வரலாறு இப்படி இருக்கும் போது தமிழினத்தின் வரலாற்று வழிவந்த இயற்கை பெயராக "தமிழர்" என்பதை மாற்ற முயல்வது திமுகவின் தமிழர் விரோதப்போக்கை காண்பிப்பதாகவே எண்ணுகிறோம்.


எனவே தமிழ்நாடு அரசு வெளியிடும் தொகுப்பிற்கு "தமிழ் களஞ்சியம்" என்று பெயர் சூட்ட வேண்டுமென தமிழ்த் தேய அவையம் தமிழ்நாடு முதல்வரை கேட்டுக்கொள்கிறது.