யார் இவர்? அப்படி என்ன செய்தார் இவர்? கொலை செய்தாரா? பாலியல் வன்முறை செய்தாரா? ஊழல் செய்தாரா? கோவில் நிலங்களை அபகரித்தாரா? இல்லை என்றால் அப்படி என்ன தான் அவர் செய்தார்??? என்ற கேள்வி தமிழ் தேசியவாதிகளின் மத்தியில் எழலாம்..
அவர் மேல சொன்ன எதையும் செய்யவில்லை. பின்பு எதற்கு அவர் நக்சலைட்டாக? தீவிரவாதியாக? இந்த சமூக சித்தரிக்கிறது என்றால்... அவர் அகவை நாள் மற்றும் நினைவு நாளுக்கு பதாகை வைப்பதற்கும், சுவரொட்டி ஒட்டுவதற்கும் தடை விதிக்கிறது என்றால்...
அவர் தேசிய இன உணர்வை மக்களிடையே பரப்பியவர்.தமிழீழ விடுதலையை ஆதரிக்க வேண்டும் என குண்டு வெடிப்பு நிகழ்வை நடத்தியவர். தனி தமிழ்நாடு வேண்டும் என்றவர். தனி தமிழ்நாட்டுகாக படையை கட்டி அடித்தவர்.பொதுவுடைமை கட்சியை தோற்றுவித்தவர். அவர் தான் தோழர் தமிழரசன்.
1945ம் ஆண்டு ஏப்ரல் 14ம் நாள் கடலூர் மாவட்டத்தில் மலர் தலை மாணிக்கம் என்ற ஊரில் மாணிக்க கல்லாய் அவதரித்த புதல்வன். துரைசாமி - பாதுசாம்பாள் தம்பதியினரின் மூத்த புதல்வன் இவர்.
கல்லூரி படிக்கும் போதே மேற்கு வங்கத்தில் உள்ள நக்சல்பாரி என்னும் இடத்தில் விவசாயிகளின் கிளர்ச்சி ஆரம்பமானது.இதன் தலைவர் சாருமசூம்தார் அழைப்பை ஏற்று இந்தியா முழுவதுப் பல மாணவர்கள் திரளாக இப்போராட்டதில் ஈடுப்பட்டனர்.அப்போது பொறியியல் படித்து கொண்டிருந்த தமிழரசனும் இணைந்தார்.
1984 ஆண்டு மே மாதம் 5,6ம் திகதிகளில் பெண்ணாடத்தில் தமிழீழ விடுதலை ஆதரவு, இந்தியாவில் தேசிய இனங்களின் விடுதலை என்னும் தலைப்புகளில் மாநாடு ஒன்றை முன்னின்று நடத்தினார்.
இந்த மாநாட்டிற்கு பிறகு தமிழரசன் தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சியை தொடங்கி அதன் கொள்கை அறிக்கையை வெளியிட்டார். அரியலூர் மாவட்டத்தில் மீன்சுருட்டி என்னும் ஊரில் 1985ம் ஆண்டு மே மாதத்தில் தமிழக விவசாயிகள் சங்கம் மாநாடு நடைபெற்றது. இம் மாநாட்டில் சாதி ஒழிப்பு குறித்த தோழர் தமிழரசனின் அறிக்கை வெளியிடப்பட்டது.
தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சியின் படைப்பிரிவாக தமிழ்நாடு விடுதலைப் படை தோழர் தமிழரசனால்
உருவாக்கப்பட்டது.தமிழ்நாடு விடுதலைப் படையின் பேரால் 1986 ல் திருவையாறு இசைவிழாவிற்கு பிரதமர் ராசீவ்காந்தி வருகை தந்தபோது குடமுருட்டி பாலத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டது. தமிழீழ விடுதலையை அங்கீகரிக்குமாறு கோரி தமிழ்நாடு விடுதலைப் படையின் சார்பாக மருதையாற்று பாலம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது.இதை தொடர்ந்து தோழர் தமிழரசன் மீதும் அவரது தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சியினர் மீதும் இந்திய அரசின் தேடுதல் வேட்டை தீவிரமடைந்தது.
1987ம் ஆண்டு செப்டம்பர் முதலாம் திகதி பொன்பரப்பி வங்கியில் பணப் பறிப்பு முயற்சியில் ஈடுபட்டவேளை தோழர் தமிழரசனும் அவருடைய தோழர்கள் தர்மலிங்கம், அன்பழகன், பழனிவேல், செகநாதன் ஆகிய ஐவரும் காவல்துறையின் திராணியற்ற கோழைத்தனத்தால் மக்கள் வேடத்தில் வந்து இவர்களின் உயிரை பறித்து சென்றது..
விடுதலைக்காக போராடி உயிர் நீத்த மாவீரர்களுக்கு வீரவணக்கம்!
0 கருத்துகள்