• திராவிடத்தின் நுண்ணரசியல்
திராவிடத்தின் நுண்ணரசியல் பற்றி தெரிந்து கொள்ளவேண்டுமா?
பெரியாரினுடைய நினைவு தினத்தையொட்டி நேற்றைய தினம் ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் செய்தியை பாருங்கள். படம் கீழே.
“ஈராயிரம் ஆண்டுகள் அடக்கப்பட்ட இனத்தின் மான உணர்ச்சியை தட்டியெழுப்பி’ என தொடங்குகிறது.
• அது என்ன இரண்டாயிரம் ஆண்டுகள் கணக்கு?
எந்த வரலாற்று ஆய்வில் இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழினம் அடக்கப்பட்ட இனமாக கூறப்பட்டிருக்கிறது?
எந்த ஆண்டு தொடக்கம்? எந்த ஆண்டு முடிவு?
• இதே 10 ம் நூற்றாண்டில்தான் சோழ சாம்ராஜ்யம் உருவாகியது. தென்கிழக்காசியா முழுவதும் சோழ சாம்ராஜ்யம் விரிந்து பரந்தது. சுமார் 400 வருடங்களுக்கு மேல் இந்த சோழ சாம்ராஜ்யம் நீடித்திருந்தது.
அதனாலேயே 400 ஆண்டுகளுக்கும் மேல் நீடித்த , one of the longest-ruling dynasties in the world's history என வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
• ஆயிரம் வருடங்களுக்கு முன்பு , அன்றைய உலகின் வெகு சில great powers களில் சோழ சாம்ராஜ்யமும் ஒன்று. அன்றைய ஆசியாவில் கடற்படை மூலமாக தனது சாம்ராஜ்யத்தை விஸ்தரித்த (overseas expansion ) ஒரே great power சோழ சாம்ராஜ்யம் மட்டுமே.
போரியல் ஆய்வாளர்கள் சோழ கடற்படை அன்றைய உலகின் மிக பலமான கடற்படை என்பதை உறுதிசெய்கிறார்கள்.
• பின் எப்படி “ஈராயிரம் ஆண்டுகள் அடக்கப்பட்ட இனத்தின் மான உணர்ச்சியை தட்டியெழுப்பி’ ?
சரி. வழமையான பிரித்தாளும் முறையை கையாளும் திராவிடத்தின் வாதத்தையே எடுத்து கொள்வோம்.
அது என்ன வாதம்?
ராஜராஜ சோழன் காலத்திற்கு பிறகான சோழ ஆட்சியில் தாழ்த்தப்பட்டவர்கள் இருந்தார்கள்
என்பதுதான் வழமையாக திராவிடம் முன்வைக்கும் வாதம்.
இந்த வாதம் பொய்யான குற்றச்சாட்டு என பல வரலாற்று ஆய்வாளர்கள் ஆதாரங்களுடன் நிருபித்திருக்கிறார்கள்.
சரி. பேச்சிற்காக இந்த வாதம் உண்மை என கொண்டால் கூட, ‘ஈராயிரம் ஆண்டுகள் அடக்கப்பட்ட இனத்தின் மான உணர்ச்சியை தட்டியெழுப்பி’ டயலாக் பொருந்தாது. லாஜிக் இடிக்கிறது.
சரி. சோழ சாம்ராஜ்யத்தில் தமிழர்களில் ஒரு பகுதி தாழ்த்தப்பட்டவர்களாக இருந்தார்கள். மறுவலமாக உயர்பிரிவினர் என தமிழர்களின் இன்னொரு பகுதி இருந்ததே. அப்படியானால் உயர்பிரிவினராக இருந்தவர்களும் தமிழர்கள். தாழ்த்தப்பட்டவர்களாக இருந்தவர்களும் தமிழர்கள்.
இதை எப்படி ஒட்டுமொத்த தமிழினத்தையும் ‘அடக்கப்பட்ட இனம்’ என கூறமுடியும்?
• எனது முன்னைய பதிவுகளில் குறிப்பிட்டது போல இன்றைய சாதிய கட்டமைப்பு பார்வையுடன் சோழர் கால சமூக கட்டமைப்பை அணுகுவதே பெரும் பிழை.
• இனி அடுத்த கேள்வி.
சோழ சாம்ராஜ்யம் வீழ்ந்ததற்கு பின்னரான சில நூற்றாண்டுகளில் தமிழ்நாடு விஜய நகர பேரரசின் கைகளுக்கு வந்துவிட்டது.
அன்றிலிருந்து இன்றுவரை தமிழினம் இன்னொரு அரசின் கீழேயே இருக்கிறது. சுமார் 700 ஆண்டுகளாக. இதை வீழ்ச்சி என வைத்து கொள்வோம்.
இது போன்ற நிகழ்வுகள் உலக வரலாறுகளில் வேறெங்கும் நடைபெற்றதில்லையா? தாராளமாக நடந்திருக்கிறது.
• முதல் உதாரணம்
மேற்குலக நாகரீகம் ( western civilization) தனது வரலாற்றை எழுதும்போது ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியை DARK AGES ( இருண்ட காலம்) என்று அழைக்கிறார்கள்.
இது கிபி 5 நூற்றாண்டிலிருந்து கிபி 10 நூற்றாண்டு வரையான கிட்டத்தட்ட 500 ஆண்டுகள்.
அன்றைய உலகின் அளவுகோல்படி செழிப்புடன் இருந்த western Roman Empire, பிற்காலத்தில் ஐரோப்பாவின் மற்றைய பகுதிகளில் வாழ்ந்த பல்வேறு பழங்குடிகளின் தொடர்ச்சியான தாக்குதலினால் வீழ்ந்த பிறகு உருவான காலப்பகுதி இது.
அவர்களின் நீண்ட வரலாற்றில் ஒரு காலப்பகுதியான இதை EARLY MIDDLE AGES என்று குறிப்பிடுகிறார்கள்.
இந்த EARLY MIDDLE AGES தான் அவர்களின் DARK AGES.
இந்த இருண்ட காலம் முடிவடைந்து அதன் பின்னே 400 ஆண்டுகளுக்கு பின்புதான் , அதாவது 14 ம் நூற்றாண்டில்தான் அவர்களின் RENAISSANCE ( மறுமலர்ச்சிகாலம்), AGE OF DISCOVERY, ENLIGHTENMENT, SCIENTIFIC REVOLUTION, INDUSTRIAL REVOLUTION என ஒரு chain reaction ஆக WESTERN CIVILIZATION இன் பொற்காலம் தொடங்குகிறது.
அன்று தொடங்கிய அவர்களின் domination கடந்த 600 வருடகாலமாக தொடர்ந்துவருகிறது.
அவர்களின் வரலாற்றில் நான் குறிப்பிட்ட அந்த 500 வருடங்களை தங்களின் இருண்ட காலமாக குறிப்பிடுகிறார்கள்.
• இன்னொரு உதாரணம் .
கிபி 711 ஆம் ஆண்டில் Arab - Berber எனும் முஸ்லிம் படையெடுப்பாளர்கள் இன்றைய ஸ்பெயின், போர்த்துகலை உள்ளடக்கிய Iberian peninsula வை கைப்பற்றினார்கள்.
அதை முழுமையாக விடுவிக்க ஸ்பெயினுக்கு 780 ஆண்டுகள் ஆனது . அதாவது கிபி 1491 இல் தான் முழுமையாக விடுவித்தது.
இந்த 780 ஆண்டுகள் ‘ காலகட்டத்தை’ ‘Reconquista’ என அழைக்கிறார்கள் .
இதற்கு பிறகு அவர்கள் உருவாக்கியதுதான் Spanish Empire. உலகின் முதலாவது Global Empire என அதை வரலாற்றாசிரியர்கள் அழைக்கிறார்கள்.
• திராவிடத்தின் நுண்ணரசியல்
உலகின் இன்றைய நாடுகள் எதைவேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள் . அது தனது வரலாற்றில் குறைந்தது ஒருமுறையாவது இன்னொரு நாட்டால் ஆக்கிரமிக்கப்பட்டு அடிமைப்படுத்தப்பட்டிருக்கும்.
அந்த காலம் இருண்ட காலமாக இருந்திருக்கலாம்.
எழுவதும் வீழ்வதும் மறுபடி எழுவதும் இனங்களின் , நாடுகளின் வரலாற்றில் இயல்பாய் நடப்பது என்றுதான் வரலாற்றாசிரியர்கள் வரலாற்றை அணுகுகிறார்கள்.
இதுதான் தமிழ்நாட்டிற்கும் நடந்தது. தமிழகத்தின் நீண்ட வரலாற்றில் சேர , சோழ , பாண்டியர்களின் வீழ்ச்சிக்கு பிறகு டெல்லி சுல்தான்களின் குறுகிய ஆட்சி, விஜயநகர ஆட்சி, நாயக்கர் ஆட்சி , மராத்திய ஆட்சி , பின் ஐரோப்பிய காலனித்துவ ஆட்சி என ஒரு 700 ஆண்டுக்காலம் வருகிறது .
அந்த 700 ஆண்டுகள் என்பது இருண்ட காலத்தை போன்றதுதான். தமிழ் இனத்தின் உட்கூறுகள் சிதிலமடைய தொடங்கியது இந்த காலப்பகுதியே .
உலக வரலாறு நெடுக இனங்கள் எழுவதும், வீழ்வதும் மறுபடியும் எழுவதும் என தொடர்ச்சியாக நடந்தது போலவே, தமிழர்களின் நீண்ட வரலாற்றிலும் எழுவதும், விழுவதும் மறுபடி எழுவதும் இயல்பாய் நடந்திருக்கிறது .
ஆனால் திராவிடம் ‘தமிழர்கள் வீழ்ந்து இருந்த காலத்தையே ‘ தமிழர்களின் ‘முழு வரலாற்றாக’ மாற்ற முனைகிறது.
மறுபடியும் ஸ்டாலினின் அந்த வார்த்தைகளை வாசியுங்கள்.
“ஈராயிரம் ஆண்டுகள் அடக்கப்பட்ட இனத்தின் மான உணர்ச்சியை தட்டியெழுப்பி”
சரியாக பெரியார் பிறந்ததற்கு முன்பிருந்த இரண்டாயிரம் வருடங்களை அப்படியே உங்களின் இருண்ட காலமாக,அடிமைப்பட்டிருந்த காலமாக கட்டமைக்கிறார்கள்.
பெரியார் பிறந்ததிற்கு பிறகான காலங்கள் நீங்கள் அடிமை தளையிலிருந்து விடுபட்ட நாள். போயே போச்.இட்ஸ் கான்.
தமிழர்களின் பெருமிதமான வரலாறு அதற்கு பிறகுதான் தோன்றுகிறது என்பதாக வரலாறு கட்டமைக்கப்படுகிறது.
இதை திரும்ப திரும்ப திராவிடம் உங்களிடம் சொல்லி கொண்டே இருக்கும்போது உங்களின் உளவியலும் இந்த கட்டமைக்கப்பட்ட பொய்யிற்குள்ளேயே இருக்கும்.
இந்த உளவியல் போர்தான் நான் மேலே சொன்ன திராவிடத்தின் நுண்ணரசியல்.
க.ஜெயகாந்த்
0 கருத்துகள்